உள்நாட்டு செய்திகள்

(UPDATE) – விசாரணைகளின் அடிப்படையில் ஜேம்ஸ் பெக்கர் இலங்கை வரவில்லை



நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பெக்கர் ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் இது குறித்து அரசாங்கம் தகவல் வழங்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

எனினும், விமான நிலையம் மற்றும் ஹில்டன் ஹோட்டலில் விசாரணை செய்த போது பெக்கர் இலங்கைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

பெக்கர் சொந்த விமானத்திலேயே வெளிநாடுகளுக்கு விஜயம் செய்வதாகவும் அவ்வாறான விமானம் எதுவும் கட்டுநாயக்கவில் தரையிறங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைக்க நடவடிக்கை…

wpengine

கொரோனா : தேசிய பொறுப்பாக கருதி உதவுங்கள்

wpengine

ரெய்னாவின் விவகாரம் பாராளுமன்றில் சூடுபிடித்த விவாதமானது..

wpengine