ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிர்வாணக் குளியலில் ஈடுபட்டவருக்கு பிணை (update)



ஹிக்கடுவ கடலில் நிர்வாணமாக நீராடியதால் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பிரயாணிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, நீதவான் கேசர சமரதிவாகர, சுற்றுலாப் பிரயாணியை 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சுற்றுலாப் பிரயாணி, தினமும் காலை கடலில் நிர்வாணமாக நீராடுவதால், குறித்த பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறுவர்களுக்கும் பெரும் தொந்தராவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவர், கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதியிலிருது தங்களது விடுதியில் தங்கியிருப்பதாக, விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் அவசரப்பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

ஐம்பது இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

wpengine

திருமண நேரத்தில் இப்படியா நடக்கனும்… புலம்பும் அசின்?

wpengine

கிரிக்கெட் அருங்காட்சியகம் திறப்பு.. (PHOTOS)

wpengine