உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபைக்கு மேலும் 200 புதிய பேருந்துகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப் பகுதிகளில், நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய 200 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், விலைமனுக் கோரலின் பிரகாரம், அங்கீகாரம் பெற்ற உள்ளூர் நிறுவனங்களின் ஊடாக, அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம், போக்குவரத்துத் துறை அமைச்சர் காமினி லொக்குகேவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

Related posts

வெளி ஓயா (மணல் ஆறு), கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன்

wpengine

திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் என நம்புகிறேன்..!

wpengine

ஹரின் CID முன்னிலையில்

wpengine