உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி எண்கள்

wpengine

மத்தள விமான நிலையத்தில் நெற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

ஜல்லிக்கட்டு விவகாரம் – மு.க ஸ்டாலின் கைது…

wpengine