Top Story 2உள்நாட்டு செய்திகள்

போலி தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போலியான தகவல்களை வழங்கும் அல்லது வழங்கப்பட வேண்டிய தகவல்களை மறைக்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதிலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதிலும் பலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை பதிவாகியுள்ளன.

இவ்வாறு போலியாக வழங்கப்படும் தகவல் குற்றமாக பதிவு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, அவ்வாறான குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மனதை உளுக்கிய மற்றுமொரு கொடூரம் – 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

News Editor

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 872

wpengine