உள்நாட்டு செய்திகள்

பெண் ஊழியரை தாக்கிய பொறியியலாளர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் தலைமை பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Related posts

சஜித் வேண்டும்: கண்டியில் ஆர்ப்பாட்டம்

wpengine

மேலும் 9 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine

ஊடகவியலாளர்களுக்கு கன்னத்தில் அறைந்திருப்பேன் – எதிர்க் கட்சித் தலைவர்

wpengine