உலக செய்திகள்

இராஜினாமாவுக்கு தயாராகும் கிர்கிஸ்தான் ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கிர்கிஸ்தான் ) – மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன்பெகோவ் (Sooronbai Jeenbekov), மத்திய ஆசிய தேசத்தில் அமைதியின்மையால் பிடிக்கப்பட்ட புதிய வெற்றிக்கு ஒரு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டவுடன் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தானில் கடந்த 3ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று, இதில் 98.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 120 ஆசனங்களில் 61 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெறவில்லை.

இந்நிலையில், தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், காகிதங்களை கிழித்தெறியும் காட்சி மற்றும் அலுவலகத்தின் மற்றைய பகுதிகளில் தீ பரவியுள்ள காட்சிகளும் அண்மையில் வௌியாகியுள்ளன.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தான் இராஜினாமா தொடர்பில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர்கள் இருவர் ஒரேசமயத்தில் இராஜினாமா..

wpengine

ஹாங்காங்கிலும் Whatsapp தடைக்கு சாத்தியம்

wpengine

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 82 பேர் உயிரிழப்பு…

wpengine