Top Story 1உள்நாட்டு செய்திகள்

கம்பஹா : மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹா, கிரிந்திவேல, தொம்பே , பூகோட , கணேமுல்ல, வீரகுல , வெலிவேரிய, மல்வதுஹிரிபிட்டிய, நிட்டம்புவ , மீரிகம, பல்லேவெல , யக்கல , ஜா-எல மற்றும் கந்தானை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து ஊடரங்கு சட்டம் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Azeem Kilabdeen

தலதா மாளிகையின் எசல பெரஹரா, 12ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,464

wpengine