Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,234 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம்(13) மாத்திரம் 39 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 12 பேருக்கும், கட்டாரில் இருந்து வந்த 16 பேருக்கும், உக்ரைன் பிரஜை ஒருவருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், குவைட்டில் இருந்து வந்த 6 பேருக்கும், செங்கடல் பிராந்திய கடலோடி ஒருவருக்கும் நேற்றைய தினம் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,996 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 226 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

“சிதைந்து கிடக்கும் முழு தாய்நாட்டையும் மீட்டெடுப்பதற்காக அனைத்துத் துறைகளையும் தூய்மைப்படுத்துவோம்”

Azeem Kilabdeen

மீதொட்டமுல்ல காணி விவகாரம்: அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 2 வருட கடூழிய சிறை

News Editor

விரைவில் இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை

wpengine