உள்நாட்டு செய்திகள்

தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

wpengine

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 10 பேர் உயிரிழப்பு..

wpengine

மேற்கிந்தியத்தீவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி

wpengine