உலக செய்திகள்

லெபனான் அரசாங்கம் இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | லெபனான் ) – கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால், அந்த நாட்டில் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையில் அமைச்சரவை நேற்று கூடி விவாதித்தது.

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், 200 பேருக்கும் அதிகமானோர் பலியான சம்பவத்தில் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு பதில் அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டார்.

Related posts

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

wpengine

ஜேர்மனி இராணுவ முகாமிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

wpengine

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

wpengine