உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை(14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விளையாட்டுத் துறை அமைச்சினால் அறிவுறுத்தல்

wpengine

சில்பசேனா தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி பிரதமர் தலைமையில் இன்று(18)

wpengine

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு

wpengine