Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோள் மண்டல காட்சி கூடம் மீளவும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சி கூடத்தினை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் கே. அருணு பிரபா பெரேராவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோள் மண்டல காட்சிகள் சமூக இடைவெளி சட்டத்திற்கேற்ப வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல் தோல்வி குறைத்து வெட்கப்படுகிறோம் – சந்திமால்…

wpengine

மின்கட்டணம் மீண்டும் அதிகரிப்பு?

wpengine

தூர சேவைக்கான பேரூந்துகளில் ஆசன ஒதுக்கீட்டுக்கு இணையத்தள வசதி…

wpengine