உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட மாணவரை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

Related posts

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

திமுத் கருணாரத்னவின் அசமந்தத்தால் சமார்த்தியமாகிய ஆஸி அணியின் பீட்டர் நிவில் (VIDEO)

wpengine

வஸீம் கொலை – முன்னாள் பொலிஸ் அதிபர் இலங்ககோனுக்கும் தொடர்பு

wpengine