Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடந்த பல நாட்களாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு  பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 26 முதல் தளர்த்தப்படவுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 26 ஆம்  திகதியில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், 24,25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(23) இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு,எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை,எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

Related posts

2017ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டம்

wpengine

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரின் உரை

wpengine

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல்

wpengine