Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்ட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தளர்தப்பட்ட போதிலும் நிலை தொடர்ந்து இருக்குமென அறிவிக்கப்ட்டுள்ளது.

இதேவேளை, 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 18 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்தப்படும்.

இவ்வாறு 18 ஆம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, குறித்த 23 மாவட்டங்களிலும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனஞ்சய சில்வாவின் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக 6ம் திகதி..

wpengine

ஐ என் ஏ (INA) கல்லூரியின் பட்டமளிப்பு விழா…

wpengine

ஜனாதிபதி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு…

wpengine