உலக செய்திகள்

விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவு – 8 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாயுக் கசிவினால் இரசாயனத் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 3 கிலோ மீற்றர் பரப்பளவில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

சீனாவிடம் கடன் பெறும் வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷ் நிதி அமைச்சர் எச்சரிக்கை!

wpengine

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை – இராணுவத்தினர் 7 பேருக்கு 10 வருட சிறை…

wpengine

பிரதமர் மோடிக்கு பங்களாதேஷில் உற்சாக வரவேற்பு

wpengine