உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையிலேயே இம்முறை புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் நிலை, பரிநிர்வாணம் இடம்பெற்ற வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது.

கடுமையான அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் பௌத்தருக்கே உரித்தான மன அமைதியுடன் செயற்பட்டமையினால் இலங்கை வாழ் மக்களை அந்தத் தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுப்பதற்கான நேரம் மிகவும் அண்மித்துள்ளது.

எனவே, நாம் தொற்றுநோயிலிருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் கோப் குழு இன்று கூடுகிறது.

wpengine

மத்தள விமான நிலையம் இந்திய நிறுவனத்திற்கு..

wpengine

மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Azeem Kilabdeen