Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்குச் சட்டம் குறித்த அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

இதேவேளை, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சனிக்கிழமை தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

wpengine

உள்ளூராட்சி சபைகளின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க் கட்சியினர்

wpengine

STF இனரது பாதுகாப்பு கருதி அதி நவீன ஆயுதங்களை புதிதாக கொள்வனவு செய்ய நடவடிக்கை …

wpengine