Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக இடைவௌி பின்பற்றாமல் சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய அபாயமுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 50 வீதமான சமூக இடைவௌியினால் அதனை 15 ஆகக் குறைக்க முடியும் எனவும் 70 வீதமான சமூக இடைவௌி பேணப்பட்டால், இதனை 2.5 வீதம் வரை குறைக்க முடியும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால், அந்த இடைவௌி 70 வீதம் வரை உயர்வடைந்திருக்கும் என்பது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நம்பிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அந்த இடைவௌி பாரியளவில் வீழ்ச்சியடைந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts

காலி முகத்திட ஹோட்டலின் 18வது மாடியில் இருந்து வீழ்ந்த இளைஞனின் பிரேத பரிசோதனை இன்று(09)…

wpengine

வனஜீவராசிகள் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

wpengine

ஆசியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பயன்படுத்த தடை..

wpengine