உள்நாட்டு செய்திகள்

மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திர பரீட்சைகள் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(16) இடம்பெற இருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைகள் வேறு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற இருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைகள் வேறு தினத்தில் இடம்பெறும் போது, அதற்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கத் தொடங்கினார்

wpengine

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டம் இன்று

wpengine

மருதானை மக்கள் வங்கியில் தீ

wpengine