Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு தென்கிழக்கே நில அதிர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு தென்கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தில் இன்று(12) அதிகாலை 2.34 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.

10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கையும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

wpengine

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

News Editor

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

wpengine