உள்நாட்டு செய்திகள்

வசந்த, தசநாயக்க வழக்கு – சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமது விசாரணைகள் நிறைவுபெறும் வரை கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி கே பி தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

11 இளைஞர்களைக் கடத்திச்சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் D.K.P. தசநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த வழக்கில் அரசியல் அழுத்தத்திற்கு ஏற்ப நீதிமன்றத்தில் சட்டரீதியிலான நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆணைக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எம்பிலிபிடிய விவகாரம் – சடலம் தோண்டியெடுப்பது குறித்து நாளை தீர்ப்பு

wpengine

இன்று இரவு 10.00 மணி வரையில் இடி மின்னலுடன் கூடிய மழை

wpengine

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

wpengine