உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ITN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் விசாரணைப் பிரிவில்



பாரிய நிதிமுறைகேடுகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இன்று சமுகமளிக்குமாறு ஐடிஎன்(ITN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்டணம் செலுத்தப்படாமல் ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில் அவர் இதன்போது விசாரணை செய்யப்படவுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் ஐடிஎன்’னில் 89.9 மில்லியன் ரூபாய்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பட்டன. எனினும் அதற்கான கட்டணங்கள் இதுவரை செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று அநுர சிறிவர்த்தன விசாரணை செய்யப்படவிருந்த போதும் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

(riz)

Related posts

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் SLPP பெரும் வெற்றி பெரும் – பசில் நம்பிக்கை

wpengine

வாகன அனுமதிக்கு மாற்றீடாக அரசு ஒரு மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

wpengine

இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் அதிகரிப்பு.

wpengine