உள்நாட்டு செய்திகள்

மிலேனியம் சவால் மனு விசாரணை ஜனவரியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று(13) புவனேக அளுவிஹார, எல்.டீ.பி. தெஹிதெனிய, மூர்து பெர்ணாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சட்டத்தரணிகள் குழுமம் மற்றும் பௌத்த தகவல் மையம் ஆகியவை சார்பில் குறித்த இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

wpengine

ஜனாதிபதி மைத்திரி ஜப்பான் விஜயம்

wpengine

சஜின் வாஸினது வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

wpengine