உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொம்பனித்தெருவில் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு -02 தர்மபால மாவத்தையிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகமவை சேர்ந்த 49 வயதுடைய மனோஜ் சுதர்சன பெரேரா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாகவும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

wpengine

இலங்கை தென்பகுதிக் கடற்பரப்பில் விழவுள்ள மர்ம பொருள் (Photos)

wpengine

சில அத்தியவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தது லங்கா சதொச நிறுவனம்..!

wpengine