உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்துள்ளனர். வீடுகளில் பிள்ளைகளுக்கு உணவு சமைக்க முடியாமல் உள்ளதுடன் நேரத்திற்கு தொழிலுக்கு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு இதனால் ஹோட்டல் வியாபாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

கட்டுப்பாடுகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

wpengine

அரசு 25 ஆயிரம் குடிசைகளை அகற்ற நடவடிக்கை…

wpengine

எழுமாறாக கொவிட்-19 பரிசோதனை

wpengine