உலக செய்திகள்

ஒன்றன் பின் ஒன்றாக யானைகள் பாறைகளில் வீழ்ந்து உயிரிழப்பு! [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து குட்டியானை உள்பட மொத்தம் 6 யானைகள் பாறைகளில் மோதி பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குட்டியை காப்பாற்ற முயன்று ஒன்றன் பின் ஒன்றாக 5 யானைகள் பாறைகளில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இதற்கு முன் கடந்த 1992ஆம் ஆண்டு இதே அருவியில் இருந்து விழுந்து 8 யானைகள் பலியான சம்பவம் தாய்லாந்தில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது நினைவுகூரத்தக்கது.

தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பூங்காவிற்குள் ஹயூ நரோக் என்ற அருவி உள்ளது.

Related posts

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

wpengine

அமெரிக்காவில் நேற்றிரவு தாக்குதல் நடாத்தியவர் உமர் மாதீன் – FBI

wpengine

ஜப்பானில் கடும் வெப்பம் காரணமாக 65 பேர் உயிரிழப்பு…

wpengine