உலக செய்திகள்

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரு நாட்டில் பேரூந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேரூந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதுடன், இந்த பேரூந்து கஸ்கோவில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் சுமார் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு…

wpengine

விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரச மரியாதை இரத்து…

wpengine

பாடசாலை மைதானத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள்

wpengine