உள்நாட்டு செய்திகள்

விசேட ரயில் சேவைகள் அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் நீண்ட விடுமுறை நாட்களை கருத்திற் கொண்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இன்று(13) காலை 07.10 அளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி விசேட ரயில் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் காலை 7.30 அளவில் ரயில் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று(12) இரவு 7.35 க்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று(13) அதிகாலை 4.43 க்கு பதுளையை சென்றடைந்துள்ளது.

அதேபோல் நேற்று(12) இரவு பதுளையில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று(13) அதிகாலை 05.26 க்கு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

wpengine

மேலும் 20 பேர் குணமடைந்தனர்

wpengine

நேற்று 551 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

wpengine