Top Story 3உள்நாட்டு செய்திகள்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(07) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாலை 4 மணிக்கு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்

தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கருகில் எடுத்துச் செல்வதை நோக்காகக் கொண்டும் இக்கண்காட்சி இன்று முதல் 10ஆம் திகதி வரை யாழ். கோட்டை முற்றவெளி மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று(07) காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Related posts

நான் மாத்­தி­ரமே கொரோனாவால் உயிரிழந்த முஸ்­லிம்­களின் ஜனாசாக்களை தகனம் செய்ய வேண்டாம் என்றேன் – ஞானசார..!

wpengine

இலங்கை தேசிய – சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும்

wpengine

படு மோசமான நஷ்டத்தில் இயங்கும் ரூபவாஹினியும், SLBC யும் – ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன..!

wpengine