உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்



(FASTNEWS|COLOMBO ) – எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு களுத்துறை, களுத்துறையை அண்மித்த பிரதேசங்கள் சிலவற்றில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி​ வாதுவ, வஸ்கடவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கும் பிலிமினாத்த, பொம்புவல, மக்கோன, பேருவளை, களுமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்த அறிவித்தல்

wpengine

வென்காய் சாங் இன்று இலங்கை வருகை…

wpengine

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான உடையில் மாற்றம் வருகிறது..

wpengine