ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலன்னறுவையில் விவசாயிகள் இருவர் படுகொலை



பொலன்னறுவை – மெதிரிகிரியவில் விவசாயிகள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு விவசாயியே கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வயல்களுக்கு நீரை திருப்பி விடுவது தொடர்பில் ஏற்பட்ட மோதலே கொலைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை மெதிரிகிரிய பொலிஸார் தற்போது கைதுசெய்துள்ளனர்.

அம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் நடந்த தாக்குதல்கள்; முஸ்லிம்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த இம்ரான் கான் [VIDEO]

wpengine

இலங்கை ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தமையினால் இலங்கை அணிக்கு தடை/தண்டம்

wpengine

ஹோட்டலில் உணவு பரிமாறும் ரோபோக்கள் – மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு…

wpengine