உள்நாட்டு செய்திகள்

ரயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் இறக்குமதி



(FASTNEWS|COLOMBO) – இலங்கை ரயில்வே சேவையில் ஒன்றிணைப்பதற்காக எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய நிதி உதவியின் கீழ் குறித்த எஞ்சின்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு முன்னரும் இந்திய நிதி உதவியின் கீழ் எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் மூன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

மேலும் இவ்வாறான எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் இரண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோனுக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி [UPDATE]

wpengine

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறக்கப்பட்டது…

wpengine