உள்நாட்டு செய்திகள்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் 03 பீடங்கள் இன்று(17) ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்திலுள்ள 3 பீடங்கள் இன்று(17) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞான பீடம், முதுகலை சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்கள் ஆகியன இன்று திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அமைதியின்மையுடன் செயற்பட்டதோடு, பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வெல்லமடம வளாகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முகாமைத்துவ பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதுடன், சமூக விஞ்ஞான பீடம் எதிர்வரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, ருஹூணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related posts

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

wpengine

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

விலைச் சூத்திரம் மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பதில் சந்தேகம் நிலவுகிறது – மரிக்கார்…

wpengine