உள்நாட்டு செய்திகள்

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவு அழைப்பு



(FASTNEWS | COLOMBO) – நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(03) ஆஜராகுமாறு கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தானவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வர்ண நிழற்படத்தை பாடசாலைப் புத்தகங்களில் அச்சிட்டதால் நிதி வீண் விரயம் ஏற்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில், கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி. இலங்கசிங்கவும் வாக்கமூலம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் பல வரிகளை மக்கள் மீது திணிக்க அரசாங்கம் திட்டம்..!

wpengine

2வது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் 40% உயர்வு

wpengine