உள்நாட்டு செய்திகள்

நாளை(22) 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை



(FASTNEWS|COLOMBO) – அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் நாளை(22) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை ஆகிய மாநகர சபைகளின் அதிகார பிரதேசங்களிலும், மஹரகமை, பொரலஸ்கமுவ, கொலன்னாவை ஆகிய நகர சபைகளின் அதிகார பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதனுடன் கொட்டிகாவத்தை முல்லேரியா பிரசே சபையின் அதிகார பகுதிகளுடன், இரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

“அழுத்தங்கள் மூலம் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தைக் கொண்டுவர முடியாது; முஸ்லிம் எம்.பிக்களுடன் பேச்சு நடத்துங்கள்” – ரிஷாட் எம்.பி வலியுறுத்து!

wpengine

முஸ்லிம் Mp க்களின் (MMDA) முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும் – 158 பேர் கையொப்பமிட்டு அறிக்கை..!

wpengine

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

wpengine