உள்நாட்டு செய்திகள்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான கடற்படை வீரருக்கு பிணை



(FASTNEWS|COLOMBO) – 2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 11வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(14) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

150,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவ​ர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வௌிநாட்டுப் பயண தடை விதிக்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்: இந்திக்க அனுருத்த

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம்

wpengine

சஜினுக்கு தொடரும் விளக்கமறியல்

wpengine