உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன



(FASTNEWS|COLOMBO) – வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் தற்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த கடல் கரையோர பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் எண்ணெய் கழிவுகள் ஒதுங்கியிருந்தன.

இந்நிலையில், கடற்படை மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து நேற்று மற்றும் இன்று காலை வரை அந்தக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

Related posts

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 272 இலங்கையர்கள்

wpengine

மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

விசா கட்டணங்களில் திருத்தம்

wpengine