உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாகவுள்ள மருந்தகங்களில் பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயம்..



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாகவுள்ள மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

மருந்தகங்களில் பரிசோதிக்கும் போது மருந்துகளின் காலாவதித் திகதி, உற்பத்தித் திகதி, விலைகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறும் தேசிய மருந்துக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இவ்விடயம் உள்வாங்கப்பட்டு வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய மருந்துக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்திலும் பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயமென வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

wpengine

இன்றும் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது

wpengine

ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் 02 பேர் கைது…

wpengine