உள்நாட்டு செய்திகள்

215 டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 215 டெட்டனேட்டர்களும் 51 ஜெலட்னைட் குச்சிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று முற்பகல் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக குச்சவௌி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்

wpengine

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்…

wpengine

19 ஆவது திருத்தத்தின் பிரகாரமே தேசிய அரசுகளை நியமிக்கலாம் – ரஞ்சித் மத்தும பண்டார..

wpengine