உள்நாட்டு செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 941 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 3,036 வாகனங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சைட்டத்தினை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்..

wpengine

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

wpengine

அரசின் வரி அறவிடப்படும் செயற்பாடுகள் தனியார்வசம்..?

wpengine