உலக செய்திகள்

மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தல் – அதிபரின் கட்சி அமோக வெற்றி…



(FASTNEWS|COLOMBO) மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தல் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிப்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

87 இடங்களை கொண்ட மாலைத்தீவு பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.

எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் முகமது நஷீத் “இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வழி வகுக்கும்” என கூறினார்.

Related posts

104 செயற்கை கோள்களை ஒரே ஏவுகணையில் செலுத்தி இந்தியா வரலாற்றுச் சாதனை…

wpengine

அமெரிக்கா துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தேர்வு

wpengine

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

wpengine