உலக செய்திகள்

மொஸாம்பிக் சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

(FASTNEWS|MOZAMBIQUE) ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் உயரக்கூடும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி பிலிப்பே நியுஸி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இந்த சூறாவளி காரணமாக் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,தகவல் தொடர்பும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஸாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ரா (Beira) பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு…

wpengine

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

wpengine

ஆஸ்திரேலிய துணை பிரதமர் இராஜினாமா…

wpengine