உள்நாட்டு செய்திகள்

ஜெனிவாவுக்கு பயணமாகவுள்ள குழு நாளை(17) கலந்துரையாடலில்..



(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையிலான 05 பேர் கொண்ட குழுவானது நாளை(17) கொழும்பில் கூடி, கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழுவில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி மன்றாடியார் நாயகம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

மேலும் குறித்த குழுவினர், எதிர்வரும் 19ம் திகதி ஜெனிவாவுக்கு புறப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேராதனைப் பல்கலைக்கழகம் மீளவும் இன்று முதல் திறப்பு..

wpengine

மேலும் 797 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும்

Azeem Kilabdeen