உள்நாட்டு செய்திகள்

விபத்துக்குள்ளான பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பு…



(FASTNEWS | COLOMBO) – பம்பலபிட்டி விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். 

கடந்த 24ம் திகதி அதிகாலை பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்..

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்…

wpengine

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

wpengine

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் வெளியிடப்படும்…

wpengine