உலக செய்திகள்

ஒசாமா பின் லேடனின் மகனின் தலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் – அமெரிக்கா அறிவிப்பு…



(FASTNEWS| USA) – ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

அல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைப் பழி வாங்க வேண்டுமென, சமீப ஆண்டுகளில் ஹம்சா காணொளி மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், சுமார் 30 வயதாகும் ஹம்சா பின் லேடன் 02 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டம் தொடரும், கைவிடப்படாது – ஹிலாரி

wpengine

‘சஹர்’ கொலைக்கு பின்னர் பெண்களுக்கான தடையை தளர்த்தியது ஈரான் [PHOTOS] [VIDEO]

wpengine

சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு…

wpengine