ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

OICஐ மோதிய சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவின் மகன் கைது…



(FASTGOSSIP | COLOMBO) பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது பம்பலபிடிய பகுதியில் டிபென்டர் வாகனம் ஒன்றினை மோதிச் சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இனது மகனான ரணிஷ்க அளுத்கமகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடமை நிமித்தம் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தப் போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(24) அதிகாலை 4.35 மணியளவில் கொழும்பு- காலி பிரதான வீதியின் டுப்ளிகேசன் சந்தியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த டிபென்டர் வாகனமும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல்; சந்திரிக்காவின் புதல்வர் களத்தில்

wpengine

இலங்கை அணியின் பலவீனம் மற்றும் பலம் குறித்து மோர்கன் கருத்து

wpengine

எமது திட்டம் இம்முறை உலகக் கிண்ணத்தில் தோற்று, 2020ல் உலகக் கிண்ணத்தினை வெல்வதே..

wpengine