உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கௌரவமிக்க விருது…



பாதுகாப்பு குழுவின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமான இராணுவ விருதினை வென்றுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி இனால் இஸ்லாமாபாதில் நேற்று(13) இடம்பெற்ற வைபவத்திலேயே ‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருது பாதுகாப்பு குழுவின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு வழங்கப்பட்டதாக பாதுக்கப்பு குழுவின் பிரதானி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இந்நாட்களில் அமான் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருதானது வெளிநாடுகளில் உள்ள அரச பிரதானிகள் மற்றும் பாராட்டுக்குரிய இராணுவ சேவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(iFA)

Related posts

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1182 [UPDATE]

wpengine

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

wpengine