உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் வழக்கின் பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…



இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பதாக அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வத்தளை நடைபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு

wpengine

அசாம் அமீனுக்கு CID வரவேண்டாம் என தெரிவிப்பு…

wpengine

ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

wpengine